ஏரி, குள ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
காஞ்சிபுரம், ஜூலை 29 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பெரும்புதூர் வட்ட பேரவை போந்தூரில் நடைபெற்றது. வட்டக்குழு உறுப்பினர் கே.செல்லப்பன் தலைமை தலைமையில் வட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஆனந்தன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார், வட்டச் செயலாளர் டி.லிங்க நாதன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.சாரங்கன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பி.செல்வராஜ், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் ஆர்.சுகந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயலாளர் கே.நேரு நிறைவுரையாற்றினார். திருப்பெரும்புதூர்-குன்றத்தூர் வட்டத்திற்குட் பட்ட கிராமங்களில் உள்ள ஏரி, குளங்கள், கால்வாய்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக விரிவுபடுத்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன.மாநாட்டில் வட்டத் தலைவராக எஸ்.ஆனந்தன், செய லாளராக டி.லிங்கநாதன், பொருளாளராக கே.செல்லப்பன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.
ராணுவ வீரர்கள் சாகச நிகழ்ச்சி
சென்னை, ஜூலை 29- பரங்கிமலையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வெள்ளியன்று ராணுவத்தினரின் கண்கவர் வீர, தீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குதிரையில் அதிவே கத்தில் சென்று இலக்கு களை தாக்குவது, எதிரெ திரே குதிரையை ஓட்டிச் செல்லுதல், வளைவு நெளி வான பாதையில் குதிரைக ளுடன் தடைகளை தாண்டு தல், நெருப்பு வளையத் தில் புகுந்து வெளியேறு தல் ஆகிய சாகசங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன.
எழும்பூர் அருங்காட்சியகத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
சென்னை,ஜூலை 29- சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தின் வளாகத்தில் கண்காட்சி கூடத்தின் பழமையான கட்டிடங்கள் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. வெயில் மழையால் பாதிக்கப்பட்ட பழமையான மேற்கூரை ஓடுகள் மாற்றி அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழமையான அருங்காட்சி யக ஆடிட்டோரியம் (மியூசியம் தியேட்டர்) சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு சேதமடைந்த தரைகள், மற்றும் இருக்கைகள் புதுப்பிக்கப்படுகின்றன. புதியதாக வர்ணம் பூசும் பணிகளும் நடந்து வருகின்றன .இன்னும் ஒரு சில மாதங்கள் வரை இப்பணிகள் நடைபெற உள்ளன.
வண்ணாரப்பேட்டையில் வடிகால் பணி துவக்கம்
தண்டையார்பேட்டை, ஜூலை 29- வண்ணாரப்பேட்டை பகுதியில் ரூ.2.5 கோடி மதிப்பில் புதிதாக மழைநீர் கால்வாய் பணிகளை ராயபுரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி வியாழனன்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 48வது வார்டுக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டையில் நல்லப்ப வாத்தியார் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் கால்வாய் வசதி இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக மழைக்காலங்களில் இங்குள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இந்நிலையில், ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சென்னை மாநகராட்சி நிதியிலிருந்து ரூ.2.5 கோடி மதிப் பீட்டில் புதிதாக மழைநீர் கால்வாய் பணிகள் துவக்கப்பட் டுள்ளது.
மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவன் பலி
காஞ்சிபுரம், ஜூலை 29- காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் நேதாஜி (வயது 9) என்ற 4-ம் வகுப்பு மாணவன் மீது வியாழனன்று இரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் தூங்கிக் கொண்டு இருந்த அவன் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தான். வீட்டில் இருந்த மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
செத்து மிதந்த ஏரி மீன்கள்
திருத்தணி.ஜூலை 29- திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த சில நாட்களாக ஏராளமான மீன்கள் செத்து வருகின்றன. அவை அப்புறப்படுத்தப்படாததால் ஏரிப்பகுதி முழுவ தும் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மீன்கள் இறப்புக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. நோய் தொற்று பரவும் முன்பு ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லால் தாக்கி மகன் படுகொலை
அண்ணாநகர், ஜூலை 29- குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மகனை கல்லால் தாக்கி படுகொலை செய்த சித்தப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் மார்டின் ஷேக் (22). இவரது சித்தப்பா பாபுஜி (32). இவர்கள், சென்னை அண்ணாநகர் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்தனர். புதனன்று குடிபோதையில் ஏற்பட்ட தகறாறில் பாபுஜி கல்லை எடுத்து மார்டின் ஷேக் தலை யில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாய மடைந்த அவர், ரத்தவெள்ளத்தில் அங்கேயே மயங்கி சரிந்தார். இதனால், பயந்துபோன பாபுஜி அங்கிருந்து ஓடிவிட்டார். இதன்பிறகு, அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த மார்டின் ஷேக்கை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
24,680 கிராமங்களுக்கு பிஎஸ்என்எல் 4-ஜி சேவை
சாகர், (மத்தியப்பிரதேசம்), ஜூலை 29- மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் ஜிதேந்திர அஹிர்வார் என்பவர் 39 மாணவர் களுக்கு ஒரே ஊசி பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சாகர் மாவட்ட (பொறுப்பு) ஆட்சியரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மாவட்ட தலைமை சுகாதார அதிகாரியை விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் மாணவர்களின் பெற்றோர், சம்பந்தப்பட்ட நபர் ஒரே தடுப்பூசி பயன்படுத்தியதாக கோஸ்வாமி யிடம் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப் கடையில் கோபால் கஞ்ச் காவல்துறை யினர் அஹிர்வார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மானாவாரி கம்பு விதைக்கலாம்: வேளாண் துறை
கள்ளக்குறிச்சி, ஜூலை 29- கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநர் சந்துரு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யுள்ளதாவது:- தியாகதுருகம் பகுதியில் ஜூலை மற்றும் ஆகஸ்டு பருவத்தில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி கம்பு சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்நிலை யில் தற்போது தியாகதுருகம் பகுதியில் பரவ லாக சுமார் 100 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. இந்த மழையினை கொண்டு மானாவாரியாக சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது நிலத்தினை உழவு செய்து கம்பு விதைத்து பயனடையலாம். மேலும் மானாவாரி சாகுபடிக்குத் தேவை யான தனசக்தி உயர் விளைச்சல் ரக கம்பு விதைகள் தியாகதுருகம் வேளாண்மை விரிவாக்க மையம் 1,300 கிலொ இருப்பு உள்ளது. சிறுதானிய நுண்ணூட்ட உரம், உயிர் உரம் மற்றும் கம்பு விதைகளை சத்தான சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் பெற்று சாகுபடி செய்யலாம். கம்பு பயிர் 90 நாட்களில் அறுவடைக்கு வரும். கம்பில் உடலுக்கு அவசியமான அதிக அளவு இரும்பு, துத்தநாக நுண் சத்துக்கள் உள்ளது. எனவே விவசாயிகள் மானாவாரி பருவத்தில் கம்பு விதைத்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓங்கூர் பாலத்தில் போக்குவரத்து ஒரு வழிபாதையாக மாற்றம்
விழுப்புரம், ஜூலை 29- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓங்கூர் ஆற்றின் குறுக்கே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் 2 பாலங்கள் உள்ளன. இந்தப் பாலங்கள் சென்னை யிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய, தென் மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லக்கூடிய போக்கு வரத்துக்கு முக்கிய வழிதடமாகும். இந்த பாலம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் தற்போது பழுது ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டி களிடமிருந்து தொடர்ந்து புகார் வந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில்,பராமரிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியானது 10 நாட்களுக்கு மேலாக நடைபெறும் என தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் மற்றொரு பாலத்தில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு, அந்த பாலத்தின் வழியாக தற்போது வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
முறைகேடு: 2 பேர் பணி நீக்கம்
சிதம்பரம், ஜூலை 29- சிதம்பரம் அருகே பரங்கி பேட்டை பகுதியில் பிரதமந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் 188 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் கம்பி உள்ளிட்ட தளவாட பொருட்கள் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு வழி களில் ரூ. 1 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடை பெற்றுள்ளதாக கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குடிசை மாற்று வாரியத்தில் கட லூரில் செயற்பொறி யாளராக பணி யாற்றிய வரும் (தற்போது சென்னையில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வரும்) எட்வின் சாம், கட லூர் கோட்ட உதவி பொறி யாளராக பணியாற்றிய வரும் (தற்போது காஞ்சி புரத்தில் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வரும்) ஜெயக்குமார் ஆகிய 2 அதிகாரிகளும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.