districts

img

உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க கோரிக்கை

விழுப்புரம்,அக்.29- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பேசிய விவசாயிகள், “பயிர்க் காப்பீட்டில் வெளிப்படைத் தன்மையில்லை என்றும் பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தில் விவசாயிகளுக்கு முறையாக உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கப்பட்டது. இதனால் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை கிடைத்தது. எனவே, கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் முகாம் நடத்தி தகுதியுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய ஆட்சியர் த.மோகன், “ விவசாயிகளை அதிகாரிகளை சந்தித்து பேசினாலே பல பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்றும் விவசாய சங்கத் தலைவர்கள் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை உடனுக்குடன் சந்திக்கலாம் என்றும் தெரிவித்தார்.