வெம்பாக்கம், ஜூன் 13-
திருவண்ணாமலை மாவட்டம், தூசி அடுத்த கூழமந்தலை சேர்ந்தவர் மரிய அமலராஜன் (46). இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பாண்டியன், தூசி காவல் நிலையத்தில் மருத்துவம் படிக்காமலேயே மரிய அமலராஜன் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது மரிய அமல ராஜன் மருத்துவம் படிக்காமலேயே ஆங்கில மருத்துவம் பார்ப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து, அங்கிருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை பறிமுதல் செய்தனர்.