districts

img

புதுச்சேரியில் ஷேக்ஸ்பியர் படைப்பு கண்காட்சி

புதுச்சேரி,ஏப்.29- புதுவை அருங்காட்சியகத்தில் ஷேக்ஸ்பியர் படைப்புகள்  குறித்த கண்காட்சி கடந்த 23ம் தேதி துவங்கியது.  இக்கண்காட்சியில் ஷேக்ஸ்பியர்,221 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகத் தொகுப்புகள், நூற்றாண்டைக் கடந்த படங்கள், நாடக பட்டியல்,புதிய மொழிபெயர்ப்பு நூல்கள்  கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஷேக்ஸ் பியர் வாழ்வில் நடந்த பல  அரிய செய்திகள், ஷேக்ஸ்பியர் கண்டறிந்த பல ஆங்கிலச்   சொற்க ளின் பட்டியல், அவரின் நாடகங்களை முதன்மை யாக வைத்து வெளி வந்துள்ள திரைப்படங் கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த அரிய கண்காட்சியை பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பார்வையிட்டனர். கண்காட்சியில் ஞாயிறன்று புதுச்சேரி பல்கலைக்கழக பண்பாடு மற்றும் பண்பாட்டு தொடர்பு இயக்குநர் கிளமண்ட் லுார்து பங்கேற்று ஷேக்ஸ்பியர் தொடர்பான  அரிய செய்திகளை பகிர்ந்த புதுவை அருங்காட்சியகத்திற்கு பாராட்டு தெரிவித்தார். கண்காட்சி ஞாயிறன்று  நிறைவு பெற்றது.அருங்காட்சியக ஆராய்ச்சி நூலக மேலாளர் மனோரஞ்சினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.