districts

img

நீர்நிலை புறம்போக்கில் வசித்து வந்த மக்களுக்கு ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள தென் நந்தியாலம் ஊராட்சியில் தேர்வு

ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் சாதிக் பாஷா நகர் நீர்நிலை புறம்போக்கில் வசித்து வந்த மக்களுக்கு ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள தென் நந்தியாலம் ஊராட்சியில் தேர்வு செய்த இடத்தில் நடைபெற்று வரும் சீரமைக்கும் பணிகளை கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.