திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகில் உள்ள மிட்னமில்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ரூ9 லட்சம் மதிப்பிலான கணினிகளை அரசு பள்ளிக்கு கணினி திறன் வகுப்பை ஒப்படைக்கும் நிகழ்ச்சி வியாழனன்று (பிப் 22), நடைபெற்றது. அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் டில்லி கணினி அறையை திறந்து வைத்தார். இதில் தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.