districts

img

நியாயமான தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

 கடலூர்,மார்ச் 17- கடலூர் மாவட்டத்தில்  Expenditure Sensitive என நான்கு சட்டமன்ற தொகுதி களை தேர்தல் ஆணை யத்தால் கண்டறியப்பட் டுள்ளதால் தேவை ஏற்படும் பட்சத்தில் கூடுதல் பறக்கும் படை உருவாக்கப்பட்டு தீவிர  கண்காணிப்பு செய்யப் படும் என மாவட்ட  ஆட்சிய ரும் தேர்தல் அதிகாரியுமான அருண் தம்புராஜ் தெரிவித் துள்ளார். கடலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதிவு செய்யப் பட்ட மற்றும் அங்கீகரிக் கப்பட்ட ஒன்றிய , மாநில அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம், மண்டல அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோ சனை கூட்டம் கடலூர் ஆட்சி யர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள்,தேர்தல் நடத்தை விதிகள் தொடர் பாக பறக்கும் படை குழு வினர், நிலையான கண் காணிப்பு குழுவினர் மற்றும் வீடியோ கண்காணிப்பு தொடர்பாகவும் இதில் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்திடும் வகையில் தேர்தல் ஆணை யம் வகுத்துள்ள விதிமுறை கள் மற்றும் அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர்களுக்கு அறி வுரைகள் வழங்கப்பட்டது. சுவிதா மற்றும் சி.விஜில்  மொபைல் செயலிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப் பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ராஜாராம் அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.