கீழ்வெண்மணி தியாகிகளின் நினைவு தினத்தையொட்டி திருவெற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்குட்பட்ட எர்ணாவூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கருணாநிதி, பகுதிக்குழு உறுப்பினர் கே.வெங்கட்டையா நிர்வாகிகள் ஆறுமுகம், விவேக், ஆனந்த், ஆரோக்கியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மூத்த தோழர் மணிவாசகம் கட்சிக் கொடியை ஏற்றினார்.