districts

500 லிட்டர் கள்ளச் சாராயம் அழிப்பு

திருவண்ணாமலை, மே 18-

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு அருகே இருவேறு சம்பவங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

   இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தடுக்கும் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஆரணியில் காவல் துறையினர் திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான மோகனாவரம் மலைப்பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனை செய்த ஆற்காட்டை சேர்ந்த சுரேஷ், நாயக்கம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 500 லிட்டர் கள்ளசாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.