districts

சென்னை முக்கிய செய்திகள்

காலமானார்

சென்னை, அக். 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எர்ணாவூர் பஜனை கோயில் கிளைச் செயலாளர் செந்திலின் தாயார் என்.மலர்விழி (68) சனிக்கிழமை (செப். 30) காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியம், பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல்,  மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.செல்வகுமாரி, பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆர்.கருணாநிதி, அலமேலு, கே.வெங்கட்டைய்யா, கே.கே.புஷ்பா, ஜெ.அன்பு (கட்டுமான சங்கம்) உள் ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி னர். அவரது உடல் ஞாயி றன்று (அக். 1) மாலை 4  மணிக்கு எர்ணாவூரில் உள்ள இடுகாட்டில் அடக்கம்  செய்யப்பட்டது.

வட்டியில்லா இஎம்ஐ திட்டத்தில்  வீடுகளுக்கான லிப்ட் வசதி

 சென்னை, அக்.2-  வீடுகளுக்கான லிப்ட் வசதியை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக திகழும் நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் நிறுவனம், தாங்கள் விரும்பிய லிப்ட்டை வாங்க வசதியாக வட்டியில்லா இஎம்ஐ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.   இதன் மூலம் வாடிக்கையாளர் தங்கள் வீடுகளில் எந்தவித கூடுதல் செலவும் இல்லாமல் பாதுகாப்பான லிப்ட் வசதியை பெற முடியும்.  இந்த எளிமையான வசதியை  வாடிக்கையாளர்கள் https://nibavlifts.com/emi-eligibility/ என்ற இணையதளம் மூலம் அணுகலாம். இது குறித்து நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான விமல் ஆர். பாபு கூறுகையில், இஎம்ஐ திட்டத்தால் தங்கள் வீடுகளில் லிப்ட்  வசதியை செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டி ருக்கும் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயனடை வார்கள் என்றார்.  வாடிக்கையாளர்களுக்கு சரியான  நேரத்தில் பராமரிப்பு ஆதரவு சேவைகளை பெறுவ தற்கும் உத்தரவாதம் அளிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எண்ணூர் அனல் மின் நிலைய சமூக பொறுப்பு நிதி

சென்னை, அக். 2- எண்ணூர் அனல் மின் நிலையத்தின் நிறுவன சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ. 10.38 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ. 10.38 கோடி விடுவிக்கப்படுவதாகவும், இதனை திருவள்ளூர் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை தலைவரிடம் வழங்குவதன் மூலம் அனல் மின் நிலையத்தின் சுற்றுப் புறத்தில் உள்ள 10 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் நிரந்தர உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட்  நேரடி வீடியோ ஒளிப்பரப்பு 

சென்னை,அக்,2- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் ரசிகர்கள் நேரடி ஒளிப்பரப்பை மொபைல்போன் வழியாக காண பார்தி ஏர்டெல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. போட்டி நடைபெறவுள்ள அனைத்து மைதானங்களிலும் உள்ள மொபைல் நெட்வொர்க் அனுபவத்தை நிறுவனம் ஆய்வு செய்தது. குறிப்பாக 5ஜி நெட்வொர்க்கில், ஏர்டெல் சென்னை எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் குரல் பயன்பாடுகளுடன் சிறந்த அனுபவத்தை வழங்கியதும் அதில் தெரியவந்துள்ளது. மைதானங்களில் ஏர்டெல் ஒட்டுமொத்த பதிவிறக்க வேகம் 30.5 Mbps மற்றும் 5G பதிவிறக்க வேகம் 274.5 Mbps ஆக உள்ளது. இது ஜியோவை விட 5.2 சதவீதம் அதிகம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

மெட்ரோ பயணிகள் அதிகரிப்பு

சென்னை, அக் . 2- சென்னை மெட்ரோவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 84.37 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயி ரத்து 458 பேர் பயணம் செய்தனர். அதேபோல் பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பேர் பயணம் செய்தனர்.

வன்கொடுமையில் மரணமடைந்தோர் வாரிசுக்கு வேலை

விழுப்புரம்,அக்.2- விழுப்புரம் வட்டம், துலுக்கநந்தம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மனைவி முத்தம்மாள் இந்து ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்தவர். அவர் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியி னர் அல்லாத பிற இனத்த வர்களால் வன்கொடு மைக்கு ஆளாக்கப்பட்டு இறந்தது தொடர்பாக  அவரதது மகனின் மகன் ராஜீவ் காந்தி என்பவர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உதவி யாளராக பணி நியமனம் செய்யப்பட்டார். அப்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் வளர்மதி உட்பட பலர் உடனிருந்தனர்.

விழுப்புரத்தில் கதர் ஆடை விற்பனை இலக்கு ரூ.1.55 கோடி

விழுப்புரம், அக்.2- விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை ஆட்சியர் பழனி தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய ஆட்சியர், “இம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கதர் விற்பனை குறியீடு ரூ.1.50 கோடி முழுமையாக எட்டப்பட்டது. நடப்பாண்டு மாவட்டத்திற்கு ரூ.1.55 கோடி விற்பனை குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த முறை சிறப்பு விற்பனையாக கதர் பாலியஸ்டர் மற்றும் பட்டு ஆகிய ரகங்களுக்கு 30 விழுக்காடு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.  அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்”என்றார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) கலைமாமணி, கதர் ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கிராம சபைக் கூட்டம்

ராணிப்பேட்டை, அக். 2 -  காந்தியடிகள் 155 வது பிறந்த தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி கலந்து கொண்டார். ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க. லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வேளாண்மை துறை மூலம் 2 விவசாயிகளுக்கு பேட்டரியால் இயங்கும் விசைத் தெளிப்பான்களையும், விதைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை உருவாக்கப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சிறப்பாக பணியாற்றி வரும் பணியாளருக்கு ஆட்சியர் சால்வை அணிவித்து கவுரவித்தார்.