மின்வாரியத்தை மூன்று கழகங்களாக பிரிப்பதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, பவர் இன்ஜினியர்ஸ் அர்கனைசேஷன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று (பிப். 23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் நிர்வாகிகள் கே.ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.சுப்பிரமணியம், தசரதன், கணேஷ்ராவ், டி.கே.சம்பத்ராவ், முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.