districts

img

பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கு

சென்னை, ஜூலை 20-

      சிமாட்ஸ் பொறியில் கல்லூரியில் முதலாமாண்டு மாண வர்களுக்கான வெற்றி மற்றும் ஒழுக்கம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.  

    இதில் முதலாம் ஆண்டு பொறியியல் பட்டதாரி மாண வர்கள் நன்கு படித்து  பொறியியல் பட்டம் பெறவும் ஒழுக்கத்தை கடைபிடிப்பதற்கும் அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விப்ரோ கட்ட மைப்பு பொறியியல் நிறுவனத்தின் ஒப்புதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் பிரிவின் இழப்பீடு மற்றும் நன்மைகளுக்கான தலைவர் ராணி சக்தி ஸ்ரீ பேசினார்.  

    ஒழுக்கத்தின் காரணமாக தான் அடைந்த வெற்றி குறித்து  மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட அவர், தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கம் எவ்வாறு முக்கியமானது என்பது  குறித்தும் எடுத்துக் கூறினார். முன்னதாக கல்லூரியின்  முதல்வர் டாக்டர். பி. ரமேஷ் வரவேற்று பேசுகையில்,  பொறியியல் துறையில் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட் பங்களை விளக்கினார். தொடர்ச்சியான கற்றல் மற்றும்  தகவமைப்புத் தன்மையின் அவசியத்தை வலியுறுத்தினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, அந்தந்தத் துறைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மாணவர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.