திருவள்ளூர், டிச 15- நலத்திட்ட உதவிகள் கேட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை அவமானம் படுத்தும் அதிகாரிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (டிச.13), பள்ளிப் பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, சொரக்கா பேட்டை போன்ற பல்வேறு கிராமங்களில் வாழும் மாற்றுத்திறனாளி களுக்கு ஏஏஎய் குடும்ப அட்டையாக வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த காரணத்திற்காக பழி வாங்கும் நடவடிக்கை யாக எந்த விசாரணையுமில்லாமல் மனுக்களை நிராகரிக்கும் ஊழியர் கணினி இயக்கும் நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மனிதாபிமானமின்றி மாற்றுத் திறனாளிகளை மிக மோசமாக நடத்தும் வட்டார வழங்கல் அதிகாரி மீது நட வடிக்கை எடுக்க வேண்டும், சரோஜா, சரோஜம்மாள், நடராஜன் ஆகியோருக்கு ஏஏஎய் குடும்ப அட்டையாக மாற்றி வழங்க வேண்டும், பொதட்டூர்பேட்டை, சொரக்காய்ப்பேட்டை பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெயை மாதந்தோறும் வழங்க வேண்டும், வீட்டு மனை இல்லாத அனைத்து மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கும் இலவச வீட்டு மனை வழங்க எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. மாதாமாதம் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்றும் கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதியாளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.கீதா தலைமை தாங்கினார்.இதில் மாநில துணைத்தலைவர் எஸ்.நம்புராஜன், ஒன்றிய நிர்வாகிகள் கணபதி, ஞானமணி, தண்டபாணி, வீரா, நந்தகோபால், சிபிஎம் வட்டச் செயலாளர் சிவபிரசாத், விசைத்தறி சங்க நிர்வாகிகே.ஜி.கணேசன், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.