districts

img

சாலை சீரமைப்புக்கு முக்கியத்துவம் 193வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.ஏழுமலை வாக்குறுதி

சென்னை, பிப்.15- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் 193வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ஏழு மலை போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்த ரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரி ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன ஏற்பாடுகள், ஆடம்பர ஏற்பாடுகள் இன்றி வேட்பாளர் தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் நடுத்தர வர்க்கத்தினரும், ஏழை எளிய மக்களும் வசிக் கும் பகுதியாக துரைப்பாக்கம் உள்ளது. கூட்டணி கட்சியின ரோடு வீடுவீடாக சென்று தினசரி வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் வேட்பாளர் எஸ்.ஏழுமலை, மக்களின் குறைகளையும் கேட்ட றிகிறார். அந்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட அவர், “மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால் வெள்ளம் தேங்குகிறது. பாதாள சாக்கடை திட்டம் இன்றி மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். கழிவு நீர் கால் வாய் இல்லாததால் பல இடங்க ளில் சாலைகளில் கழிவு நீர் ஓடுகிறது. பல வீடுகள் குடிநீர் இணைப்பு இன்றி உள்ளன. எல்லையம்மன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடக்க கூட முடியாத வகையில் மோசமான நிலையில் சாலைகள்உள்ளன. இவற்றையெல்லாம் முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டி உள்ளது’’ என்றார். சோழிங்கநல்லூர் தொகுதி முழுக்க பாதாள சாக்கடை திட்டம் இல்லை. எனவே, ஒருங்கி ணைந்த வகையில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டி உள்ளது.

குடிமனைப் பட்டா என்பது மக்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது. அதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சிறப்பு நேர் வாக பட்டா வழங்க வலியுறுத்து வோம் என்றும் அவர் கூறினார். தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலரானால் இந்த பகுதி வளர்ச்சிக்கு என்ன செய்வீர் கள்? என்ற கேள்விக்கு பதில ளித்த அவர், புறநகர்ப் பகுதி விரைவான வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆகவே, இந்தப்ப குதிக்காக நகர்ப்புற மையத்தை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படும். சுய உதவிக்குழுக் ்களை ஊக்குவிப்பதோடு, இளை ஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். திடக்கழிவு மேலாண்மையை திட்டமிட்டு ஒருங்கிணைப்போடு செயல்படுத் ்தப்படும். பூங்காக்கள் பராமரிப்ப தோடு, மின்விளக்கு தேவைப் படும் இடங்களில் சூரியஒளி மின் விளக்குகள் அமைக்கப்படும் என்றார். தனிப்பெண்கள், மாற்றுத்திற னாளிகள், முதியோர் உதவித் தொகைகள் கிடைக்க முன்னு ரிமை அளிக்கப்படும். மத்திய கைலாஷில் இருந்து சிற்றுந்து இயக்கவும், ஓஎம்ஆர் சாலை - தலைமை செயலக குடியிருப்பு செல்லும் சாலை சந்திப்பில் பேருந்துகள் நின்று செல்ல நட வடிக்கை எடுக்கப்படும். கிளை நூலகம் மேம்படுத்தப்படும். துரை ப்பாக்கம் பள்ளி மேம்படுத்தப் ்படும் என்றும் அவர் கூறினார். 193ஆவது வார்டில் இருந்த சுடுகாடு ஆக்கிரமிக்கப் ்பட்டுவிட்டது. எனவே, புதிதாக ஒரு மயானம் உருவாக்கப்படும். பல்லாவரம் ரேடியல் சாலையை கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்)யுடன் இணைக்கும்  திட்டத்தையும், பக்கிங்காம் கால்வாய் மீது அமைந்துள்ள அறிஞர் அண்ணாநகர் வாகன பாலத்தை மேம்படுத்தவும்  நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஏழுமலை கூறுகிறார்.