செங்கல்பட்டு. பிப் 22- மாலை நேரங்களில் எந்த ஆய்வு கூட்டமும் நடத்தக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று (பிப்21) பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மீது சுமத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ஊழியர்கள் நலன் கருதி உடனடியாக கைவிட வேண்டும், செங்கல் பட்டு மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய்த் துறை அலுவலர்களை மாலை 6 மணிக்கு மேல் ஆய்வு கூட்டங்கள், இணைய வழி கூட்டங்கள் மாவட்டம் முழுவதும் நடத்து வதை உடனடியாக கைவிட வேண்டும் வருவாய்த் துறையில் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவதை தவிர்த்து கவுன்சிலிங் முறையில் பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும், உயிரிழந்த குடும்பத்தில் தற்போது வரை நான்கு நபர்களுக்கு அடிப்படையில் வாரிசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுப் பணியில் பணியிடம் வழங்குவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில் மாவட்ட தலைவர் வி.வெங்கட்ரமணன் தலைமையில் மாவட்ட செயலாளர் விக்டர்சுரேஷ்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் பூங்குழலி, மாவட்ட செயலாளர் சி.முகமது உசேன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பரணி உள்ளிட்ட பல்வேறு சகோதர அமைப்பு களின் நிர்வாகிகள் பேசினர். வருவாய் துறை சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மணிகண்டன் நிறை உரையாற்றினார். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக் கப்பட்டதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.