districts

img

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை விரைந்து அமைக்க வேண்டும்

சென்னை, டிச. 26- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜனவரி 15 வாக்கில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையப்  பணிகளை விரைந்து முடித்து திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திங்களன்று  ஆய்வு  செய்த  அமைச்சர் பி.ஜே.சேகர் பாபு பொங்கல் பண்டிகைக்கு திறக்கப்படும். இதனை முதலமைச்சர் திறந்து வைப்பார் என தெரிவித்துள்ளார். மேலும் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்த பணிகள் அனைத் தும் தொடங்கி வருகிற 2024ஆம் ஆண்டு நிறை வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோவும் வரும் என தெரிவிக்கப் பட்டது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மொத்தமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மக்கள் எவ்வாறு நகரத்திற்குள் வருவார்கள் என்ற கேள்வி பொதுமக்களிடம்  எழுந்துள்ளது. எனவே ரயில் நிலையத்தை விரைவாக கட்டிமுடித்து திறந்தால், அனைத்து பகுதிகளில் இருந்தும் பயணிகள் வந்து செல்ல வசதியாக இருக்கும். எனவே இந்த பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும் பயணி களும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.