districts

img

அகவிலைப்படி மற்றும் சரண் விடுப்பு முழுமையாக வழங்க வேண்டும்

குன்றத்தூர், அக்.26 - பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர் அனைவருக்கும் வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட 14 ஆவது மாநாடு  குன்றத்தூரில் தோழர்கள்  எஸ்.வனத்தையன், கே.வி.வேதகிரி நினைவரங்கில் மாவட்டத் தலை வர் வே.லெனின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. குன்றத்தூர் வட்டச் செயலாளர் பி.கௌதமி வரவேற்க, மாவட்ட துணை தலைவர் சீதா சீனிவாசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டைத் துவக்கி வைத்து சங்கத்தின் மாநிலச் செய லாளர் து.சுமதி பேசினார். மாவட்டச் செய லாளர் துரை.மருதன் வேலை அறிக்கையை யும், பொருளாளர் வே.குமார் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சகோதர சங்கங்களின் தலைவர்கள் வி.ஏ.சுந்தரவடிவேல், வி.நீலாவதி, எஸ்.ரஞ்சித் சிங், வி.ரமணி வி.எபிகோல்டா மேரி, எஸ்.நவீன் குமார், என்.சாரங்கன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் தெ.வாசுகி பேசினார். குன்றத்தூர் வட்ட கிளை உறுப்பினர் ஜெ.சண்முகவள்ளி நன்றி கூறினார். தீர்மானம் சத்துணவு அங்கன்வாடி ஊர்புற நூல்கள், வருவாய் கிராம உதவியாளர், எம்.ஆர்.பி செவிலியர் உள்ளிட்ட அனை வருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயல ருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக சி.கிருஷ்ண மூர்த்தி, செயலாளராக துரை.மருதன், பொரு ளாளராக வி.வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, மகளிர் மாநாடு மகளிர் மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் வெ.லெனின் தலைமை தாங்கினார். இதில் மகளிர் துணைக் குழு உறுப்பினர் எம்.தேவிகா வரவேற்றார். மகளிர் துணைக் குழு அமைப்பாளர் எம்.ஆர்.திலகவதி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் கோ.கௌரி பேசினார். மகளிர் துணைக் குழு அமைப்பாளராக எம்.ஆர்.திலகவதி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மகளிர் துணைக் குழு உறுப்பினர் கி.பார்வதி நன்றி கூறினார்.