திருவண்ணாமலை, ஆக.28- மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டண மில்லா மருத்துவ திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என திருவண்ணா மலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கத்தின் 8 ஆவது மாவட்ட பேரவை கூட்டம் மாவட்டத் தலைவர் ப.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடை பெற்றது. மாநிலச் செயலாளர் சி. சுப்பிர மணியன் துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் ம. நாதன் நிறைவுறையாற்றி னார். மாவட்டச் செயலாளர் பச்சையப்பன், ஆண்டறிகையையும் பொருளாளர் ஆனந்தன் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.