கள்ளக்குறிச்சி,ஜூன் 20-
கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் கிராமத்திலுள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஷ்ரவன்குமார் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர்(பொது) சுரேஷ், தேர்தல் தனி வட்டாட்சியர் சையத் காதர், கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் சத்திய நாராயண, தேர்தல் துணை வட்டாட்சியர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.