districts

img

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி மின்ஊழியர்கள் போராட்டம்

மின்வாரிய கணக்கீட்டு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், செயலி மூலம் கணக்கீட்டு பணி மேற்கொள்ள மொபைல் போன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூன் 18) கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் துணைப்பொதுச் செயலாளர் ரவிக்குமார், சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், மாநில பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, செயற்குழு உறுப்பினர் ஹெலன் தேவகிருபை, திட்ட செயலாளர்கள் பண்டாரம்பிள்ளை (தெற்கு 1), கவுதம் (தெற்கு2) உள்ளிட்டோர் பேசினர்.