கிருஷ்ணகிரி,நவ1- ஊத்தங்கரை வட்டம் எட்டுப்பட்டி ஊராட்சி முக்கிரம்பள்ளி கிராமத்தில் முனுசாமி, ராஜம்மா வீடுகள் அருகில் இரண்டு மின் கம்பங்கள் உடைந்து எலும்பு கூடாக நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. ஓராண்டு நீடிக்கும் இந்த அவலம் குறித்து பலமுறை புகார் அளித்தும் மின்வாரியத்தினர் இப்பகுதியை திரும்பி கூட பார்க்கவில்லை. பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என்று வாலிபர் சங்கம் சார்பில் செயலாளர் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்.