கிருஷ்ணகிரி,ஆக. 11-
கிருஷ்ணகிரி மாவட் டம், ஊத்தங்கரை ஒன்றி யம், காட்டேரி ஊராட்சிக் குட்பட்ட ஒன்ன கரை கிராமம். இங்கு 160 குடும்பம் வசிக்கின்றன. வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் இந்த கிராம மக்கள் வனப்பகுதியை யொட்டி வசித்து வருவ தால் அரசு அதிகாரிகள் பெரி தாகக் கண்டு கொள்வ தில்லை.
கடந்த ஐந்து ஆண்டு களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இந்த கிராம மக்க ளுக்கு கிடைக்கவில்லை. இதனால், கருமான் குட்டை ஏரி கரையோரம் அமைந்துள்ள திறந்தவெளி கிணறு தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு இந்த கிணற்றில் மின் மோட்டார் பழுதானதால், இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம் தடையின்றி கிடைக்கவும், பழுதான மோட்டாரை உடனடியாக பழுநீக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
மாவட்ட செயற்குழு உறுப்பினரும் காட்டேரி பகுதி ஒன்றிய கவுன்சிலருமான வி.கோவிந்தசாமி தலைமை யில் விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர்கள் சுந்தரம், சேட்டு, ஊர் பெரிய வர்கள் தங்கதுரை, ஆனந்த பாபு ஆகியோர் வீடு வீடாகச் சென்று கையெழுத்து பெற்றனர்.
பிறகு, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலு வலர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி கள் உடனடியாக நட வடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர்.