சென்னை, நவ. 29- திருவொற்றியூர் 4 ஆவது வார்டு முருகப்பா குளம் பூங்கா வில் ரூ. 5.75 லட்சத்தில் 13 மின் விளக்குகள் அமைக்கப்படும் என்று மாமன்ற உறுப்பினர் ஜெய ராமன் கேள்விக்கு மேயர் பிரியா பதில் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் புதனன்று (நவ. 29) நடைபெற்றது. கூட்டம் துவங்கி யதும் விடுதலை போராட்ட வீரரும் தகைசால் தமிழர் விருது பெற்ற வருமான தோழர் என்.சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மேயர் பிரியா கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனை வரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதேபோல், பங்காரு அடிகளார் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 4 ஆவது வார்டு உறுப்பினர் ஆர். ஜெய ராமன் பேசுகையில்,“ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு 8 ஆண்டு கள் சிறை தண்டனையும், 3 ஆண்டு கள் தலைமறைவு வாழ்க்கையும் மேற்கொண்டவர். 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணி யாற்றியவர் 102 வயதில் மரண மடைந்தார் தோழர் என். சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்த தமிழ்நாடு அரசுக்கும் முதல்வருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், தனது கோரிக்கையை ஏற்று எர்ணாவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 5 நிரந்தர ஆசிரியர்கள், 4 எஸ்எம்சி முறை ஆசிரியர்கள், ஒரு உதவியாளர், 2 காவலர்கள் நியமனம் செய்த மேயர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். 4ஆவது வார்டு முருகப்பா குளம் பூங்காவில் காலை 4.30 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அங்கு, மின் விளக்குகள் அமைக்க வேண்டும். விம்கோ ரயில் நிலையத்தில் இருந்து சண்முக புரம் முதல் தெருவரை தெரு விளக்கு கள் இல்லை. இந்த ரயில் நிலை யத்தில் இருந்து 4, 6, 7 வார்டு களுக்கு செல்லும் ஆயிரக்கணக் கான மக்கள் இச்சாலை வழி யாக செல்கிறார்கள். இரவில் பெண்க ளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இங்கும் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த மேயர், “முருகப்பா குளம் பூங்காவில் ரூ.5.75 லட்சத்தில் 13 மின் விளக்கு கள் அமைக்க ஒப்பந்த புள்ளிகள் விடப்பட்டுள்ளது. பணி உத்தரவு வழங்கி விரைந்து பணி முடிக்கப்படும்” என்றார். அப்போது குறுக்கிட்ட ஜெயராமன்,“ டெண்டர் விடுவதில் வகுப்பு 5 இல் பதிவு செய்த புதிய ஒப்பந்ததாரர் பணி அனு பவம் கேட்டு, புதிதாக யாரும் ஒப்பந்த புள்ளி கோராமல் பார்த்துக் கொள்கிறார்கள். இத னால் சிண்டிகேட் போட்டுக் கொள்கி றார்கள் என்ற சந்தேகம் உள்ளது. எனவே முறைகேடு இல்லாமல் பணி நடைபெற வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஆணையர் ராதாகிருஷ்ணன், “மின்துறை அலுவலர்களுடன் ஆலோசித்து முறைப்படி பணி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.