districts

img

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் 1.5 லட்சம் வாக்குகள் பெற தேர்தல் வியூகம்!

ஒட்டன்சத்திரம், மார்ச் 24-  திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்  ஆர்.சச்சிதானந்தம் அறிமுகம்-  செயல் வீரர்கள் கூட்டம் வெள்ளியன்று ஒட்டன்சத்திரம்  சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமை வகித்து பேசுகையில், ‘‘இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக நமக்கான நிதி பங்கீட்டை முறையாக கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது’’ என்றார். கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கர பாணி பேசுகையில், ‘‘கடந்த தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றியானது தமிழகத்தில் வாக்கு சத வீதத்தில் முதலாவதாக இந்தியா அளவில் மூன்றாவதாகவும் அமைந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் சச்சிதானந்தத்தின் வெற்றி இந்தியாவி லேயே அதிக கவனத்தை பெறும் வகையில் அமைய வேண்டும். ஒட்டன்சத்திரம் தொகு தியில் மட்டும் நமது கூட்டணிக்கு ஒன்றரை லட்சம் வாக்குகள் பெறுவதற்கு நாம் அனைத்து முயற்சியையும் எடுக்க வேண்டும். சிறிய ஊராட்சியில் ஆயிரம் வாக்குகளும் பெரிய ஊராட்சிகளில் 2000 முதல் 3000 வாக்கு களையும் பெற வேண்டும். அதற்காக ஒட்டன்சத்திரம் தொகுதியில்  நடைபெற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண் டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் 100 நாள் பணிகளுக்கு கூலி ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும்’’ என்று கூறினார். கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பி. செந்தில்குமார் (பழனி), எஸ்.காந்திராஜன் (வேடசந்தூர்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், திமுக ஒன்றியச் செயலாளர்கள் ஒட்டன்சத்திரம் ஆர்.ஜோதிஸ்வரன், தி.தர்மராஜன், தொப்பம்பட்டி க.தங்கராஜ், நா.சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. அருள்செல்வன், ஒட்டன்சத்திரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.சிவமணி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சிஐடியு தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் எம்.முருகேசன் நன்றி கூறினார்.