districts

img

எழில் நகர் மேம்பால பணி: ரூ. 25 லட்சம் செலவில் மாற்றுப் பாதை

சென்னை, செப். 6- சென்னை ஆர்.கே. நகர்  கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் கொடுங்கையூர் எழில் நகர்  பகுதியில் சரக்கு ஏற்றி செல்லும் ரயில்வே கிராசிங் உள்ளது. இதனால் அந்த பகுதியில் ரயில்வே கேட்  மூடும்போது வாகன ஓட்டி கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து ரூ. 106 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கி நடை பெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த போக்குவரத்து மாற்றத்தால் பல கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து புதிதாக மாற்றுப்பாதை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் ெஜ.ெஜ.எபிநேசர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அன்னை சத்யா நகர் சுண்ணாம்பு கால் வாய் ரயில்வே இணைப்பு சாலையில் புதிதாக சாலை அமைக்கும் பணி புதனன்று (செப். 6) நடைபெற்றது. அதை சட்டமன்ற உறுப்பி னர் எபினேசர் தொடங்கி வைத்தார். இதில் மண்டலக் குழு  தலைவர் நேதாஜி கணேசன்,  திமுக பகுதிச் செயலாளர்  ெஜபதாஸ் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் பா.விமலா, ஏ.மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.