சென்னை, பிப்.4- இந்தியா மற்றும் உலக சந்தைக்காக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மின்சார பைக் தயாரிப்பில் ஓபென் எலக்ட்ரிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க உலகம் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் தயாரிப்புகள் அதிகரித்துள்ளது. நமது நாட்டிலும் இதற்கான முன்னெடுப்புகள் அதிகரித்துள்ளன. இந்த துறை யில் ஓபென் எலக்ட்ரிக் நிறுவனம் விரைவில் தனது தயாரிப்பு களை அறிமுகம் செய்யவிருப்பதன் மூலம் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனத் துறையில் நுழைந்துள்ளது. 4 வாகனங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர்களான மதுமிதா மற்றும் தினகர் அக்ரவால் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற வாகனங்களை வாங்கும்போது அல்லது அதனை ஓட்டும் போது நுகர்வோர் எதிர்கொள்கின்ற சிரமங்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப சரியான தீர்வுகளை உருவாக்கியுள்ளதாக இணை நிறுவனர் தினகர் அக்ரவால் கூறினார்.