districts

img

பிற்போக்கான கல்விக்கொள்கையை எதிர்க்க ஒரணியில் திரளவேண்டும்

புதுச்சேரி,டிச.25- பிற்போக்கான தேசிய கல்வி கொள்கையை எதிர்க்க அனைவரும் ஓர் அணி யில் திரள வேண்டும் என்று கல்வியாளர் எல். ஜவஹர்நேசன் வேண்டுகோள் விடுத்தார். புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் 19 ஆவது மாநாடு அரசு ஊழியர் சம்மேலனத்தில் ஞாயிற்றுகிழமை (டிச-24) நடை பெற்றது மாநாட்டிற்கு அறிவியல் இயக்கத்தின் தலைவர் டாக்டர் ஆர்.மதிவாணன் தலைமை தாங்கினார். மாநாட்டையொட்டி சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. ‘‘கல்வி தளத்தில் எதிர்கொள்ளும் சவால்கள்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், கல்வியாளர் எல்.ஜவஹர் நேசன் பங்கேற்று பேசியதாவது இந்திய சுதந்திரம் அடைந்து 75  ஆண்டுகள் முடிந்த நிலையில், உலக அளவில் 190   நாடுகளில் பேச்சுரிமை யில் நம் நாடு கடைசி வரிசை யில் தான் உள்ளது. அதேபோல் பஞ்சம், பசி கொடுமையிலும் 120 நாடுகளில் இந்தியாவுக்கு கடைசி இடம். மனித உரிமை, மனித வளர்ச்சியில் 130 நாடுகளில் நாம் கடைசி இடத்தில் உள்ளோம். இப்படி மனித வளர்ச்சிக்கான அனைத்து துறைகளிலும் கடைசி இடத்தில் இருக்கும் போது, உலக நாடுகள் நம்மை நிமிர்ந்து பார்ப்பதாக மத்திய ஆட்சியாளர்களால் தம்பட்டம் அடிக்கப்பட்டு வருகிறது. மனித வளர்சிக்கு எதிரான தேசியக் கல்விக் கொள்கையை நம்மிடம் திணிக்கிறார்கள். இந்தியாவிலேயே இரண்டு மாநிலத்தில் தான் இந்த கல்விக் கொள்கையை அமல்படுத்தப்பட்டது. முதலில் கர்நாடகத்தில் 2021 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அங்கு  ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மக்களுக்கு எதிரான தேசிய கல்வி கொள்கை  திரும்ப பெறப்பட்டுள்ளது.  

புதுச்சேரியில் இந்த கல்விக் கொள்கை  அமல்படுத்தப் பட்டுள்ளது. இங்கு பேசிய ஆசிரியர்கள்  தேசிய கல்வி கொள்கையை  புதுச்சேரியில் திணித்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தான் அறிவு பூர்வமான கல்வி முறையை நாம் மாணவர்களி டத்தில் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில உள்ளோம். மத்திய ஆட்சியாளர்களால் தேசிய கல்விக் கொள் கையை அமுல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு கட்டாய உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது. கல்வி என்பது நமது வாழ்வியல் சம்பந்தப்பட்டது. எனவே தான் ராணுவத்தை வைத்தும், துப்பாக்கிகள் ஆயு தங்களை வைத்து மக்களை மாற்றி விட முடியாது என்பதில்  ஹிட்லரும், முசோலினியும் தெளிவாக இருந்தனர். எனவே தான் அவர்கள் கல்வியை ஆயுத மாக கையில் எடுத்தனர். அதே நிலைய தான் இன்றைக்கு இந்தி யாவிலும் கல்வியை ஆட்சி யாளர்கள் ஆயுதமாக எடுத்துள்ள னர். இத்தகைய பிற்போக்குத் தனமான  கல்வி முறையை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்பதில் நாம் உறுதி யாக இருக்க வேண்டும் என்றார்.  புதுச்சேரி அறிவியல் இயக்க நிறுவனர் டாக்டர் டி.சுந்தரராமன் நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க பொதுச்செயலாளர் எஸ்.சுப்புர மணி, விரிவுரையாளர் எஸ்.சரவணன், அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ராதாகிருஷ்ணன், அறிவி யல் இயக்க நிர்வாகிகள்  ஆர்.பார்த்தசாரதி, ஆர்.ரமேஷ், எஸ்.செங்கதிர், உட்பட திரளான பிரதி நிதிகள் மாநாட்டில் பங்கேற்ற னர்.