districts

img

தென்பெண்ணை பாலாறு இணைப்புத்திட்டம் நடக்கும்போது நடக்கும்: அமைச்சர் துரைமுருகன்

வேலூர், டிச.26- வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் இளையநல்லூர் ஊராட்சியில் ரூ.23.50 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலு வலக கட்டடம், ஜங்காலப்பள்ளி மற்றும் வாணிகாட்டூரில் 2 பகுதி நேர நியாய விலைக்கடைகள் மற்றும் மேல்காட்டூர் மற்றும் திகுவப்பள்ளியில் தலா ரூ.9.32 லட்சம் மதிப்பில் 2 புதிய நியாய விலை கட்டிடங்களை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்வில் பேசிய அவர், காட்பாடி தொகுதிக்குட்பட்ட மகிமண்டலம், கிறிஸ்டியான் பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படித்த இளைஞர்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பாக அமையும். தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத அனை வருக்கும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன், டங்ஸ்டன் சுரங்க பணிகளை ஒன்றிய அரசு தற்பொழுது தள்ளி வைத்திருப்பதாக தெரி வித்தார். அண்மையில் பெய்த மழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆறுகள், அணைகள் மற்றும் நீர்நிலைகளில் சேதமடைந்துள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தென்பெண்ணை பாலாறு இணைப்புத்திட்டம் நடக்கும்போது நடக்கும் என்று கூறினார். இதில் மாவட்ட ஆட்சியர் வே.ரா.சுப்பு லெட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு குணஐயப்பதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.