districts

img

ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்

சென்னை, ஜூன் 24-

    குப்பை அள்ளும் வாகனத்தில் மண்ணை ஏற்றிக் கொண்டு சென்ற ஒப்பந்த ஊழியர், வாகனத்தின் டிப்பரில் தலை சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சியில் புதிதாக குப்பை அள்ளுவதற்காக வழங்கப்பட்ட மினி வாகனங்களில், நிர்வாகத்தின் அலட்சியத்தால் மண் அள்ளிச்சென்று கொட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது.

    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த விஜய் (21) என்பவர், கடந்த ஒரு மாதமாக ஒப்பந்த அடிப்படையில் கேளம்பாக்கம் ஊராட்சியில் மினி குப்பை வண்டி ஓட்டி வந்துள்ளார். குப்பை அள்ளும் வாகனத்தில் மண் அள்ளிச் சென்றதால் மண்ணை கொட்டிவிட்டு மீண்டும் வாகனத்தின் ஜாக்கியை கீழே இறக்கும்போது, தலை டிப்பரில் மாட்டிகொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

   இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, விஜயின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.