சென்னை, செப். 29- எண்ணூர் பவுண்டரி விரி வாக்கம் குறித்து கருத்துக் கேட்பு கூட்டத்தை எம்.எல்.ஏ. கவுன்சிலர்கள், பொது மக்கள் ரத்து செய்ய கோரிய தையடுத்து மாவட்ட ஆட்சியர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். சென்னை எண்ணூரில் எண்ணூர் பவுண்டரி உருக்காலை உள்ளது. இரண்டு மடங்கு உற்பத்தியை பெருக்கும் வகையில் உருக்காலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருத்து கேட்புக் கூட்டம் அன்னை சிவகாமி நகரில் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாவட்ட மாசுகட்டுபாட்டு பொறியாளர் இந்திரா காந்தி ஆகியோர் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில், திருவொற்றி யூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மாமன்ற உறுப்பினர்கள் கே.பி. சொக்கலிங்கம், கோமதி, சிவ குமார், திமுக மேற்கு பகுதி செய லாளர் அருள்தாசன் உள்ளிட்டு எண்ணுார் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கிராம நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அவர்கள், எண்ணூர் பவுண்டரி விரிவாக்க திட்டத்தால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். ஏற்கெனவே, கருப்பு துகள் படிவதால் இப்பகுதியில் உள்ள பெண்களுக்கு மார்பக புற்று நோய், டிபி, ஆஸ்துமா உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. தொழிற் சாலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. தொழிற்சாலை அமைந்துள்ள பகுதி யில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வில்லை. பொதுமக்களுக்கு முறை யாக தகவல் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் கூட்டத்தை ரத்து செய்து, மாவட்ட ஆட்சியர் அறிவிக்க வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒருமித்த குரலில் முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து ஆட்சியர் கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.