சென்னை,ஜன.31- மெட்ரோ ரயில் பணிகள் நந்தனம் பசும் பொன் முத்து ராமலிங்கத் தேவர் சாலை யில் மேற் கொள்ள இருப்ப தால், அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து போக்கு வரத்து காவல்துறை விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் சாலையில் ஜி.கே. மூப்பனார் மேம்பால சந்திப்பிலிருந்து டி.டி.கே சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் வழக்கம் போல் செல்லலாம். டி.டி.கே சாலை சந்திப்பில் இருந்து ஜி.கே மூப்பனார் மேம்பால சந்திப்பை நோக்கி வாக னங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மந்தை வெளியிலிருந்து கோட்டூர் புரம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் அடையார் கிளப் கேட் சாலை, ஏ.பி.எம் அவின்யூ மற்றும் டர்ன் புல்ஸ் சாலை விரிவாக்கம் வழியாக இடது புறமாக செல்லலாம். மந்தைவெளியிலிருந்து நந்தனம் சிக்னல் சந்திப்பை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் டி.டி.கே சாலை ஸ்ரீராம் நகர் தெற்குத் தெரு மற்றும் ஜி.கே. மூப்பனார் மேம்பால சந்திப்பு வழியாக நந்தனம் செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.