திருவள்ளூர், ஆக. 5-
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் 4ஆவது வார்டில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை அருகே உள்ள தலக்காஞ்சேரி குப்பை மேட்டில் கொட்டப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் சுமார் 50,000 டன்னிற்கும் மேலாக இமயமலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அந்த குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என நகராட்சி நிர்வாகத்தினர் தரம் பிரிக்காமல் அங்கு கொட்டி வருகின்றனர்.
மேலும் திருவள்ளூர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் இருந்து மருந்து பாட்டில்கள், சிரிஞ்சுகள், ரத்தம் உறைந்த பஞ்சுகள், கையுறைகள், முகக்கவசம் என தினசரி லாரி மூலம் 1 டன்னுக்கு மேலாக மருத்துவக் கழிவுகள் இங்கு கொட்டப்படுகின்றன.
4ஆவது வார்டை சுற்றி தலக்காஞ்சேரி, எடப்பாளையம், சின்ன ஈக்காடு உள்ளிட்ட பகுதியில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும் பெரும் பாலானோர் வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள், குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்படு வதாகவும், கால்நடைகள் மற்றும் பறவை கள் மருத்துவக் கழிவுகளை தின்பதால் நோய் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.