districts

img

போதை மாத்திரை விற்பனை: மாணவர்கள் கைது

சென்னை,ஏப்.24- மதுரவாயல் பகுதியில் போதை மாத்திரையை ஆன்லைனில் வாங்கி விற்ற 2 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சீமாத்தம்மன் நகரில் சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை காவல் துறையினர் விசாரணை செய்தனர். அதே பகுதி பாக்யலட்சுமி நகரை சேர்ந்த குகன் (20) மற்றும் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் (20) என்பது தெரிந்தது. மேலும் அவர்களது பையை சோதனை செய்ததில் அதில் போதை மாத்திரை மற்றும் ஊசி மருந்துகள் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. தனியார் கல்லூரி மாணவர்களான குகன், கிஷோர்குமார் ஆகிய இருவரும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து போதை மாத்திரைகள் வரவழைத்து அதை உடன் படிக்கும் நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து  இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 91 போதை மாத்திரைகள், 4 ஊசி மருந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறி முதல் செய்யப்பட்டது.