ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: ரூ.209 கோடியில் ஒப்பந்தம்
சென்னை, நவ. 28- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் 2இல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரூ. 269 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் போக்குவரத்து பிரச்சனைக்கு, மெட்ரோ ரயில் வருகையும், சேவையும் மிகப்பெரிய நிம்மதியை பயணிகளுக்கு தருகிறது. இப்போதைக்கு சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் ஓடுகிறது. சென்ட்ரலில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக இன்னொரு வழித்தடம் செயல்பட்டு வரு கிறது. பயணிகளின் வசதிக்காக பல்வேறு அதிரடிகளை மெட்ரோ நிறுவனம் அவ்வப் போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2இல், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை உருவாக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.269 கோடியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. கடந்த வருடம் 26 மெட்ரோ ரயில்கள் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தான நிலை யில், தற்போது கூடுதலாக 10 மெட்ரோ ரயில்கள் என மொத்தம் 36 மெட்ரோ ரயில்களை வழங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், மெட்ரோ ரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். வழித்தடம் 4இல் பூந்தமல்லியில் கட்டப் பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்ட மிடப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்: அமைச்சர்கள் பங்கேற்பு
சிதம்பரம், நவ.28- கடலூர் மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் ராய் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், ஸ்ரீமுஷ்ணம் வட்டார பகுதி களில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், நடைக் கருவி, நடை பயிற்சி உபகரணங்கள், சிறப்பு சர்க்கரை நாற்காலி, கைபேசி, நவீன மடக்கு குச்சிகள், நவீன திறன்பேசி காதொலி கருவி, உள்ளிட்ட 1107 உபகரணங்களை ரூ. 51 லட்சம் மதிப்பில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், கூடுதல் ஆட்சியர் சரண்யா, உதவி ஆட்சியர் சுவேதா சுமன் வட்டாட்சியர் செல்வகுமார், நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் வயலூரில் நடைபெற்ற ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் வீடு கட்டும் பயனாளிகள், சுய உதவிக் குழு வங்கி கடன் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட பயனாளிகள் உள்ளிட்ட மொத்தம் 607 பேருக்கு ரூ. 17 கோடியே 93 லட்சத்து 24 ஆயிரத்திற்கு வங்கிக் கடன் காசோலைகளை வழங்கி னார்கள்.
ராணிப்பேட்டையில் தொழில் துவங்க ஒப்பந்தம்
ராணிப்பேட்டை, நவ. 28 - சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் ராணிப்பேட்டை நகராட்சி முத்துக்கடை தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024 முன்னிட்டு தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற பெருந்திரள் கூட்டத்தில் கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி முன்னிலையில் ரூ. 424 கோடியில் 19 தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஆனந்தன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பிரசன்ன குமார், நகர மன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத், முஹம்மது அமீன், ஹரிணி தில்லை, தமிழ்ச் செல்வி அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர் பொறுப்பேற்பு
காஞ்சிபுரம், நவ.28- காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட நத்தப்பேட்டை பகுதியில் உள்ள 27 வது வார்டில், கடந்தாண்டு நடந்த மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் ஷாலினி என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர், தனது உண்மையான சாதியை மறைத்து போட்டியிட்டதாக விஜயகுமாரி என்பவர் காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஷாலினி கவுன்சிலராக தொடர இடைக்கால தடை விதித்து, கடந்த அக்.20ல் காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடைக்கால தடையை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஷாலினி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், கவுன்சிலர் ஷாலினிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி, நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவு நகலை, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் செந்தில் முருகனிடம் கவுன்சிலர் ஷாலினி வழங்கினார். இதைத் தொடர்ந்து, அவர் 27வது வார்டு கவுன்சிலராக மீண்டும் பணியாற்ற துவங்கினார்.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
சென்னை, நவ.28- தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டாரவள மைய பயிற்றுநர் பணிகளில், 2 ஆயிரத்து 582 காலியிடங்கள் உள்ளன. இதற்கு நேரடி நியமன போட்டித் தேர்வு, அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு பட்டம் மற்றும் பி.எட். முடித்தவர்கள் வருகிற 30 ஆம் தேதிக்குள்விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கிடையில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கையை ஏற்று, பட்டதாரி ஆசிரியர், வட்டார வள மைய பயிற்றுநர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற டிசம்பர் 7 வரை கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே விண்ணப்பித்த தேர்வர்கள், வருகிற டிசம்பர் மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் திருத்தம் மேற்கொள்ள லாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மீண்டும் ஆவின் டிலைட் பால்
சென்னை, நவ. 28- ஆவின் ஊதா நிற டிலைட் பால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவின் நிறுவனம் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக 90 நாட்கள் வரை கெடாத புதிய ‘ஆவின் டிலைட்’ எனும் பால் பாக்கெட்டை சமீபத்தில் அறிமுகம் செய்தது. பச்சை நிற பால் பாக்கெட் 4.5 விழுக்காடு கொழுப்பு சத்து கொண்டது. ஆனால் புதிய ரக ஆவின் டிலைட் பால் 3.5 விழுக்காடு கொழுப்பு சத்து மட்டும் கொண்டுள்ளது. பசும்பால் அது கெடாமல் இருப்பதற்காக, எந்தவித ரசாயனமும் சேர்க்கவில்லை. இதை பிரிட்ஜில் வைக்கத் தேவையில்லை. மழைக் காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைக்க ஆவின் டிலைட் மிகப் பெரிய பங்காற்றும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் செவ்வாயன்று ஆவின் நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிவிப்பு, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு ஆவின் ஊதா நிற டிலைட் பால் பாக்கெட் வழங்கப்படும். 3.5 விழுக்காடு கொழுப்புடன் கூடிய இந்த அரை லிட்டர் ஆவின் டிலைட் பால் ரூ. 21 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்
சென்னை, நவ.28- பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஆர்வி பல்கலைக்கழகம் ஆகஸ்டு 2024-ல் துவங்கவிருக்கும் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்களை ஏற்பதாக அறிவித்துள்ளது. இப்பல்கலைக்கழகம் ஸ்கூல் ஆஃப் பிசினஸ், ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், ஸ்கூல் ஆஃப் டிசைன் அண்ட் இன்னோவேஷன், ஸ்கூல் ஆஃப் லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், ஸ்கூல் ஆஃப் பிலிம், மீடியா, கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்கூல் ஆஃப் லா ஆகிய தனது ஏழு இடைநிலைப் பள்ளிகளில் வழங்கப்படும் 60 இளங்கலை மற்றும் முதுகலை திட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக நிறுவன துணைவேந்தர் பேராசிரியர் ஒய்.எஸ்.ஆர். மூர்த்தி கூறுகையில், “ஆர்.வி.பல்கலைக்கழகம் கற்பித்தல், ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் சிறந்து விளங்க பாடுபடுகிறது. மாணவர்களுக்கு துடிப்பான கற்றல் சூழலை வழங்குவதில் உறுதியாக உள்ளது. எங்கள் சிறந்த ஆசிரியர்கள் விமர்சன சிந்தனை திறன்களை வளர்ப்பது தவிர, அனுபவமிக்க மற்றும் இடைநிலைக் கற்றலில் கவனம் செலுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சி, நவ.28- டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் விழா டிச.2 அன்று உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (டிச.2) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் கணினி, தொழில், ஆட்டோமொபைல் துறை, டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி தனியார் துறைகளைச் சார்ந்த 150 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஓட்டுநர் உள்ளிட்ட 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, செவிலியர், ஆசிரியர் தகுதி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப் படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஷரன் குமார் தெரிவித்திருக்கிறார்.
பாலியல் தொல்லை: விஏஓ சிறையில் அடைப்பு
விழுப்புரம்,நவ.28- விழுப்புரம் அருகே இருளர் குடியிருப்பில் வசித்து வரும் 28 வயது இளம் பெண்ணின் கணவர் கடந்த 2014-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அந்த இளம் பெண் 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ், விதவை உதவித் தொகை வழங்க கோரி நல்லா பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை அப்பெண் அணுகியுள்ளார். இதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கரராஜன், அப்பெண்ணிட மிருந்து செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதனை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாணவர்களுக்கு கல்விக் கடன் உதவி
ராணிப்பேட்டை, நவ. 28 - ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், அரப்பாக்கம் அன்னை மீரா தொழில்நுட்பவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து செவ்வாயன்று (நவ. 28) நடந்த கல்விக் கடன் முகாமில் 8 மாணவர்களுக்கு ரூ. 36.7 லட்சம் மதிப்பீட்டில் கல்விக் கடனுதவியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தலைமை தாங்கினார். குளோபல் கலை மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி, அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்.எஸ்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.