districts

img

ஆதிதிராவிடர் குடியிருப்பில் குடிநீர் தட்டுப்பாடு மாதர் சங்க தலையீட்டால் சீரானது

சென்னை, டிச. 18- திருவொற்றியூர் ஆதி திராவிடர் காலனியில் மாதர் சங்க தலையீட்டால்  குடி நீர் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டனர். மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிறு வனம் இயங்காததால் திரு வொற்றியூர் மேற்கு பகுதி முழுவதும் குடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு ள்ளது. இதனால் ஆதி திராவிடர் காலனி, எர்ணா வூர் பஜனை கோயில் தெரு, ஜெய்ஹிந்த் நகர், ராம நாதபுரம், சண்முகபுரம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன் தலைமையில் மாதர் சங்கத்தினர் குடிநீர் வடிகால் வாரிய மண்டல அலுவலர் வேணுகோபலை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து ராம நாதபுரம் சண்முக புரம் பகுதிகளில் லாரி மூலம் குடி நீர் விநியோகம் செய்யப் பட்டது. பஜனை கோவில் தெருவில் அடைப்பை நீக்க நட வடிக்கை எடுக்கப் பட்டது. ஆதி திராவிடர் கால னிக்கு கூடுதல் அழுத்தத்து டன் குடிநீர் வழங்க நட வடிக்கை எடுப்பதாக மண்டல பொறியாளர் தெரி வித்தார். இதில் வடசென்னை மாவட்டச்செய லாளர் எஸ்.பாக்கியம், பகுதி தலைவர் அலமேலு, கிளைச் செயலாளர்கள் தன லஷ்மி, புவனேஸ்வரி சண்முகபுரம் நலச்சங்க தலைவர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.