8ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இந்தியன் ரயில்வேக்களுக்கு இடையே இடமாறுதலை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே ஊழியர் சங்கம் (டிஆர்இயூ) சார்பில் ஆவடியில் சிறப்பு கருத்தரங்கம் கவுரவத் தலைவர் அ.ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், டிஆர்இயூ பொதுச்செயலாளர் வி.அரிலால், துணைத் தலைவர் பேபி ஷகிலா ஆகியோர் பேசினர்.