தொடர் மழையால் காட்டுமன்னார் கோவில் அருகே குமராட்சி பகுதி யில் 200 ஏக்கர் நேரடி நெல்விதைப்பு பயிர்கள் தண்ணீரில் அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்துள் ளனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் வட்டத்திற்குட்பட்ட குமராட்சி அருகே உள்ள வாண்டையார் இருப்பு, வெள்ளூர், வெச்சூர் உள்ளிட்ட சுற்று வட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 நாட்களுக்கு முன்பு 500 ஏக்கருக் கும் அதிகமாக சம்பா நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிதம்பரம், காட்டு மன்னார்கோவில் பகுதியில் பெய்த தொடர் மழை பெய்து வருகிறது. ஊமையன் வாய்கால், நரிமோட்டு வாய்கால் ஆக்கிரமிப்பு செய்து ள்ளதாலும் தூர்வாரமல் புதர்மண்டி கிடப்பதாலும் மழைநீர் வடியாமல் 3 நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதால் நெற்ப்பயிர்கள் அழுகியுள்ளது. விளை நிலத்தில் தேங்கிய நீரை ஒரு சில விவசாயிகள் மோட்டார் மூலம் வெளியேற்ற முயற்சித்தும் பலனி ல்லை. இதனால், நெற்பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து விவசாயிகள் கோவிந் தசாமி, செல்வராஜ் ஆகியோர் கூறுகை யில்,“மூன்று மணி நேரத்தில் வடிய வேண்டி மழை நீர் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வடிய வில்லை. இதனால் தான் 200 ஏக்கருக் கும் அதிகமான நெற்பயிர்கள் முழ்கி அழுகிவிட்டது”என்றனர். வாய்க்கால்கள் இருந்தே இடமே அடையாளம் தெரியாமல் உள்ள தால் தூர்வாரவேண்டும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், 5 மாதத்திற்கு முன்பே தூர்வாரியாச்சு, பில் தொகையையும் கொடுத்தாச்சு இனிமேல் 5 ஆண்டுகளுக்குபிறகு தான் தூர் வாரமுடியும் என்று கைவிரித்து விட்டதாக வேதனையுடன் தெரிவித் தனர். தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வ த்தின் சொந்த கிராமமான முட்டம் கிராமத்திற்கு மிக அருகாமையில்தான் இந்த கிராமங்கள் உள்ளது. இப்படி இருந்தும் வாய்க்கால்கள் தூர் வாராம லேயே? தூர்வாரியதாக கணக்கு மட்டும் காட்டி ரூ. 5 லட்சத்தை ஏப்பம் விட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பும் விவசாயிகள், அதிகாரிகள் தூர்வாரிய வாய்காலை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். விவசாயிகளின் புகார் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பதற்கு செல்பேசியில் அழைத்தபோது ஒருவரும் அழைப்பை ஏற்கவில்லை. எனவே, இந்த இது குறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்ப்பார்ப்பாகும். - காளிதாஸ்