அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வரதட்சணை புகார்
சென்னை, பிப். 21- சோழிங்கநல்லூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் மீது அவரது மருமகள் ஸ்ருதி பிரியதர்ஷினி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், திருமணத்தின்போது 1000 சவரன் வரதட்சணை கேட்டனர். 2018ம் ஆண்டு திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது. மேலும் 400 சவரன் நகை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், வரதட்சணை கேட்டு, தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தினர். பெண் குழந்தை பிறந்த பிறகு 2021இல் தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் வீட்டை விட்டு விரட்டி விட்டனர். மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார். மகள் மருத்துவம் படித்தபோது, சக மருத்துவர்களுடன் எடுத்த புகைப்படங்களை தவறாக சித்தரித்து அவதூறு பரப்புகிறார்கள். கே.பி.கந்தன், அவரது மனைவி, மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மற்றும் மகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மென் பொறியாளர் தற்கொலை
சென்னை, பிப். 21- சென்னை தண்டையார்பேட்டையில் மென்பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடுங்கையூர் மீனாம்பாள் நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் பவித்ரா (22). மென்பொறியாளரான இவர், அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில நாட்களாக உடல் நலக்குறைவுடன் காணப்பட்ட பவித்ரா, தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் தெருவில் வசிக்கும் தனது சகோதரி நீலாவதி வீட்டுக்கு செவ்வாய்க் கிழமை சென்றார். அங்கு இரவு தங்கிய பவித்ரா, நள்ளிரவு அந்த வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நீலாவதி குடும்பத்தினர் இதுகுறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் தற்கொலை வழக்கு காவல்துறை விசாரணை துவக்கம்
திருவள்ளூர், பிப்.21- திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென சுவற்றின் மீது ஏறி கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கை காவல்துறையினர் விசா ரணை செய்துவருகின்றனர். திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் காலனி, புத்தர் நகரை சேர்ந்தவர் முனுசாமி (50). பிப் 19 அன்று காச நோயால் பாதிக்கப்பட்டதுடன், ரத்த வாந்தி எடுத்து போதைக்கு அடிமையான இவர் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். இந்நிலையில் பிப் 20 அன்று இரவு மனநலம் பாதித்தது போல மருத்துவமனையில் கலாட்டா செய்துள்ளார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் முனுசாமியை பிடித்து வந்து மீண்டும் படுக்கையில் படுக்க வைத்து கை கால்கள் கட்டிய நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் புதனன்று (பிப் 21), காலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க செல்ல வேண்டும் என சொல்லி கட்டை அவிழ்த்து விட்டதும், முனுசாமி மீண்டும் கத்திக் கொண்டே கலாட்டா செய்துள்ளார். அப்போது திடீரென முதல் மாடி படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முனுசாமியின் மனைவி சுமதி திரு வள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.