திருவள்ளூர், டிச.19 - எண்ணை படலங்களால், பழவேற்காடு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பட்டுள்ளதால், நிவாரணத்தை இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் மணலியில் உள்ள சிபிசிஎல், ஐஓசிஎல் உள்ளிட்ட எண் ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய எண்ணை கழிவு கடலி லும்,பக்கிங்காம் கால்வாயிலும் படலமாக கலந்துள்ளது. இதனால் மீன், நண்டு, இறால் என கடல் வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எண்ணூர் பகுதியை சேர்ந்த மீனவர் கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பழவேற்காடு ஒட்டியுள்ள கடல் பகுதியிலும் எண்ணை கலந்து வந்துள்ளது என்று சொல்லி மீனவர்கள் எண்ணை படலங்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள் ளனர். வைரவன் குப்பம் கடற்கரை, கோரைக்குப்பம் கடற்கரை ஓரம் பெண்கள் கிளிஞ்சல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எண்ணை படலத்தால் பெண்களின் வலைகள் சேதமானது. மேலும் கால் களிலும் கைகளிலும் எண்ணை பட லம் பட்டுவிட்டதால் பாதியிலேயே பெண்கள் கரைக்கு திரும்பினர். பழவேற்காடு ஏரி பகுதியிலும் எண்ணை படலம் படர்ந்துள்ளதால் பழவேற்காடு பகுதி மீனவ கிராம நிர்வாகிகள் ஏரி பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து மீன்வளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதால் மாவட்ட ஆட்சியரும் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஏற்கெனவே 25 நாட்களாக மிக்ஜம் புயல் காரணமாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வரும் நிலையில் தற்போது எண்ணை படலம் படர்ந்து உள்ளதால் பழ வேற்காடு மக்களின் வாழ்வாதார முற்றிலும் முடங்கியுள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க உத்தரவிடும்படி யும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிபிஎம் வேண்டுகோள் இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், மாவட்டக் குழு உறுப்பி னர் பி.கதிர்வேல், திருவள்ளூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.வினாயகமூர்த்தி, மாவட்ட செயலாளர் டி.நித்தியானந்தம், துணைத் தலைவர் தாஸ் ஆகி யோர் செவ்வாயன்று (டிச.19), பழவேற்காடு, வைரவன் குப்பம், கோரைக்குப்பம் ஆகிய பகுதி களில் கடலோரங்களில் ஆய்வு மேற்கொண்டனர். எண்ணை கரை ஒதுங்கிய படத்தின் மாதிரியை சேகரித்தனர். இதனை அங்கு பார்வையிட வந்த பொன்னேரி சட்டமன்றத் உறுப்பினர் துரை.சந்திரசேகர், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ஜி.ரவி ஆகியோரிடம் காண்பித்து இது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி எண்ணை பரவுவதை தடுக்க வேண்டும். கடற்கரை ஓரத்தில் உள்ள அரசு மற்றும் தனி யார் நிறுவனங்கள் கடலில் சுடு நீர், சாம்பல், எண்ணை போன்றவை கலப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப் பட்டுள்ளது. சதுப்பு நில காடுகளும் அழிவை நோக்கி செல்வதால் சுற்றுச்சூழல் அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக்ஜம் புயல் மழையால் கடந்த 25 நாட்கள் தொழிலுக்கு செல்லாமல் உள்ளனர். இந்த சூழலில் எண்ணை படலம் கலந்த மீன்களை பிடித்தா லும், வாங்க மக்கள் தயங்குவதால் மீனவர்கள் தொழிலுக்கு செல்லா மல் சிரமப்பட்டு வருவதால் நிவா ரணத்தை இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.