districts

img

தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்காதே: செங்கொடி சங்கம்

சென்னை, நவ. 29- சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நட வடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி செங்கொடி சங்கம்  சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில்  புதனன்று (நவ. 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாணை (2டி) 62ன் படி அனைத்து துறை என்யூஎல்எம் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 725 ஊதி யம் வழங்க வேண்டும், பல ஆண்டு கள் பணிபுரியும் என்எம்ஆர், தொகுப்பூதி யத்தில் பணியாற்றும் அனைத்து துறை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மலேரியா, சாலை, பூங்கா, அம்மா உணவகத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய வார விடுப்பு வழங்க வேண்டும். 2022-23 ஆண்டுக்கான போனஸ் வழங்க வேண்டும், மாநகராட்சியில் தனியார் மயத்தை கைவிட வேண்டும், என்யூஎல்எம்  குழுவில் பணி செய்யாமல் மேஸ்திரிகள் என்று சொல்லிக் கொண்டு பல லட்சம் ரூபாய் கையாடல் நடப்பதை தடுத்து நிறுத்து உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி துணைத் தலைவர் பி.சுந்தரம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் சி.திருவேட்டை, பொதுச் செயலாளர் சீனிவாசலு, நிர்வாகிகள் ராஜன், முனுசாமி, தேவராஜ், சரவணன், வரதராஜன், ஜனார்தனம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.