districts

18 மாதங்களே நிரம்பிய குழந்தையின் மூளைக்கட்டியை அகற்றிய மருத்துவர்கள்

சென்னை, ஜுன் 8-  

     பெங்களூருவைச் சேர்ந்த 18 மாதங்களே நிரம்பிய குழந்தையின் மூளையிலிருந்த அரிதான தீவிர கட்டியினை சென்னையை சேர்ந்த மருத்துவர்கள்  வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

     இயல்பற்ற, டெரடோய்டு ராப்டாய்டு டியூமர் (ATRT) என அழைக்கப்படும் அதிவே கமாக வளரக்கூடிய மூளைக் கட்டி இருப்பது இக்குழந்தைக்கு கடந்த ஆண்டு  கண்டறியப்பட்டு, அதனை அகற்றுவதற்காக வேறொரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.  ஆனால், அதே அறிகுறிகள் மீண்டும் தோன்றியதால்,  கடந்த மாதம் சென்னை சூளைமடு எம்ஜிஎம்  ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு இக்குழந்தை அழைத்து வரப்பட்டது.  மூளைத்தண்டில் கட்டியின் வளர்ச்சி திரும்பவும் நிகழ்ந்திருப்பது சோதனை களில் தெரிய வந்தது.  

    ATRT என்பது, மூளை மற்றும் முதுகுத்தண்டில் உருவாகக்கூடிய அரிதான, மிக வேகமாக வளரக்கூடிய ஒரு  புற்றுக்கட்டியாகும்.  இத்தகைய கட்டிகளுள்  ஏறக்குறைய பாதியளவு சிறுமூளையில் அல்லது மூளைத்தண்டில் முதலில் தொடங்கு கின்றன.  மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள சிறுமூளையே நமது நகர்வு, சமநிலை மற்றும் தோரணையைக் கட்டுப் படுத்துகிறது என்று  இந்த கட்டியை நுண்அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றிய எம்.ஜி.எம் மருத்துவமனையின் மூளை – நரம்பியல் அறுவைசிகிச்சை பிரிவு  இயக்குனர் டாக்டர். ரூபேஷ் குமார் கூறினார்.  ஏடிஆர்டி என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு புற்றுக்கட்டியாகும். அறுவை சிகிச் சைக்குப் பிறகு 5-வது நாளன்று குழந்தை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இப்போது அக்குழந்தை நலமுடன் உள்ளது என்றார்.