சென்னை, நவ.12- நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு நோய் தி னம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு சென்னையில் உள்ள டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் வெள்ளிக்கிழமை (நவ.11) மருத்துவர்களுக்கும் நோயா ளிகளுக்கும் இடையே ஒரு கலந்துரை யாடல் அமர்வை நடத்தியது. சமூக ஊடகங்களில் இருந்து வரும் தகவல்களை பெரும்பாலும் உண்மையாக இல்லை என்பதால் அவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் நீரிழிவு குறித்த உண்மையான தகவல்களை மருத்துவர்கள் வழங்கவேண்டும் என்று ஒரு நோயாளி கேட்டுக்கொண்டார். மாற்று மருத்துவ முறை குறித்து அது தொடர்புடைய குழுக்க ளுடன் சமூக ஊடங்கள் வாயிலாக கலந்துரை யாடலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மற்றொரு பங்கேற்பாளர், நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள தனது பெற்றோருக்கு ஆதரவாக கடந்த 20 ஆண்டுகளாக இருந்ததை சுட்டிக்காட்டியதோடு வீடுகளில் பெண்கள் தங்களது பணியில் அதிக கவனம் செலுத்தி வருவதாலும் பரபரப்பான வாழ்க்கையை அவர்கள் எதிர்கொண்டுள்ள தாலும் அவர்களை மையமாக கொண்டு நீரிழிவில் இருந்துபெண்களை பாதுகாப்ப தற்கான தகவல் மற்றும் செயல்பாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த டாக்டர் மோகனின் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்கு நரும் மருத்துவருமான டாக்டர் ஆர்.எம், அஞ்சனா, நோயாளிகள் மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ளவும், புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அறிந்துகொள்ளவும் தமது மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி குறிப்பிட்டார். 35 வயதான நோயாளி ஒருவர் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை நாள்தோறும் இன்சுலின் ஊசி மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தி வருவதாகவும் இதனை காணும் போது பெற்றோருக்கு ஏற்படும் மன உளைச்சலில் இருந்துவிடுபட தகுந்த ஆலோசனைகள் தேவை என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்த மோகன் நீரிழிவு மையத்தின் தலைவர் டாக்டர் வி. மோகன், டைப் 1 நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை இன்சூலின் அதிகரித்துள்ளது என்றார். 100 ஆண்டுகளுக்கு முன்பு இன்சுலின் கண்டுபிடிக்கும் வரை, டைப் 1 குழந்தைகள் சில மாதங்கள் மட்டுமே உயிர் பிழைத்திருப்பார்கள். ஆனால் இன்று உடற்பயிற்சி. யோகா, இன்சூலின் என்று நீரிழிவை 90வயதுக்கும் மேல்வரை கட்டுக் குள் வைத்திருக்க முடிகிறது என்றார். இருப்பி னும், நீரிழிவு நோயாளிகள் தங்கள் நிலையை மேம்படுத்திக்கொள்ள ஆராய்ச்சி கள் தொடர்ந்து அதிகளவில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.