சென்னை, ஜூன் 14- இந்திய ரயில்வே துறையின் முதல் தனியார் ரயில் தமிழகத்தின் கோவையில் இருந்து சீரடிக்கு செவ்வாயன்று (ஜூன் 14) இயக்கப்பட்டது. இந்த ரயில் பிரதமர் மோடி அறிவித்த பாரத் கவுரவ் ரயில் (பிஜிடி) திட்டத்தின் அடிப்படையில் முதன்முறை யாக முழுக்க தனியார் இயக்கும் ரயிலாகும். எம் அண்டு சி பிராப்பர்ட்டி டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு இயக்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அந்த தனியார் நிறுவனத்துடன் தென்னக ரயில்வேயின் ஆப்பரேட்டிங் துறை நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இதர ஜோனல் ரயில்வேக்களுடன் பேசி ரயில்வே வாரிய அனுமதியுடன் இந்த பாரத் கவுரவ் ட்ரெயின் கோவை வடக்கு ரயில் நிலையத்தி லிருந்து புறப்பட்டு சாய்நகர் சீரடியை சென்ற டையும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதையடுத்து தமிழகத்திலிருந்து இயக்கப்படும் முதல் தனியார் ரயில் இயக்கத்தை கண்டித்தும், அந்த தனியார் ரயிலை அரசே இயக்கக் கோரியும், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் டிஆர்இயூ- (சிஐடியு) சார்பில் மாநிலம் முழு வதும் 100க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் செவ்வாயன்று (ஜூன் 14) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கோவை
கோவையில் செயல் தலைவர் து.ஜானகி ராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொதுச்செயலாளர் வி.அரிலால், உதவி பொதுச்செயலாளர்கள் செந்தில்குமார், சரவணன், துணைத் தலைவர்கள் பேபி ஷகிலா, ஜி.சிவக்குமார், முன்னாள் துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஒர்க்சாப் டிவிசன் தலைவர் எதுகிரி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தலைவர் பார்த்தசாரதி, துணைச் செயலாளர் ஜிஜோனி, இணை பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் பா.ராஜாராமன், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கிளைச் செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயல் தலைவர் து.ஜானகி ராமன், முன்னாள் செயலாளர் எம்.காசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் டிஆர்இயு நிர்வாகிகள் பங்கேற்றனர்.