districts

img

ஆட்டோ தொழிலாளர்களுடன் மோதாதே தினமலர் பத்திரிகைக்கு எச்சரிக்கை!

சென்னை, ஜன. 22- ஆட்டோ தொழிலாளர்கள் பயணிகளை மிரட்டி அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும் தகாத செயல்களில் ஈடுபடுவதாகவும் தின மலர் நாளேட்டின் செய்திவந்ததை கண்டித்து அனைத்து ஆட்டோ தொழி லாளர்கள் சார்பில் சனிக்கிழமை அன்று சென்னை தாராபூர்டவர் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருத்தப்பட்ட  மீட்டர் கட்டணத்தில் ஆட்டோக்கள் இயக்க வில்லை எனவும், ஆட்டோவில்வரும் பெண்களை தவறாக பார்ப்ப தாகவும், சீருடை அணிவதுஇல்லை எனவும் காவல்துறை அதிகா ரிகள் வட்டார போக்குவரத்து அதி காரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை என்று செய்தி வெளியிட் ்டிருக்கிறது. இந்த அவதூறு செய்தியை கண்டித்தும்  மறுப்பு தெரிவிக்க கோரி யும் சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மு.சம்பத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் தலைவர் வி.குமார் பேசுகையில், தினமலர் பத்திரிகை ஆட்டோ தொழிலாளர்கள் மீது தொடர்ந்து வன்மத்துடன் அவதூறு செய்திகளை பதிவு செய்து வருகிறது.

நாடே நெருக்கடியை சந்தித்துள்ள இந்த கொரோனா தொற்று காலத்தில் தொழில் ரீதியாக கடுமையான பாதிப்புக்குள்ளானது ஆட்டோ தொழில் தான். இந்த காலத்தில் கூட பெரும்பா லான ஆட்டோ தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் இலவசமாக தங்கள் ஆட்டோக்கள் மூலம் கொரோ னா நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேவை செய்துள்ளனர்.  வரு மானம் இல்லாததால் வாங்கியகடன் கட்ட முடியாமல்  நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்கொலைசெய்து கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன.  

இப்படி வறுமையோடு வாழ்ந்தாலும் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறஆட்டோ தொழிலாளர்கள் மீது அவதூறு களை அள்ளி வீசாமல் அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க சிறந்த ஆலோ சனைகளை சொல்ல வேண்டிய ஊடகங்கள் பொய் செய்திகளை வெளியிடவேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஒரு விழுக்காட்டினர் செய்கிற தவறுகளை, ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளிகளையும் அதே கோணத்தில் பார்ப்பது பொருத்த மற்றது. கடந்த 18 ஆண்டுகாலமாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாதது, விண்ணுயரும் பெட்ரோல், கேஸ் டீசல் விலை உயர்வு , போக்குவரத்து காவ லர்களின் லஞ்சலாவண்யம், உபரி பாகங்கள் விலை உயர்வு, காப்பீட்டு பிரிமியம் உயர்வு, புதுப்பித் ்தல் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு  பிரச்சினைகள் மத்தி யில் பொதுபோக்குவரத்துக்கு உதவி செய்து வரும் ஆட்டோ தொழிலா ளர்கள் மீது இனியேனும் தவறான செய்திகள் வெளியிடவேண்டாம் என அனைத்து ஆட்டோ தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக் ்கொண்டார். தொமுச மாநில பொருளாளர் நடராஜ், ஆட்டோ சம்மேளன பொதுச் ்செயலாளர் எம்.சிவாஜி, செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், காஜா மொய்தீன் (எஸ்டிடியூ), சோமு (குட்வில்), சுப்பிரமணியபிள்ளை (எஸ்எம்எஸ்), அமெரிக்க நாரா யணன் (இனோடா),சுப்பிரமணி (பிடிஎஸ்) அழகேசன் (ஐஎன்டியுசி), சுந்தரம் (ஏஐடியுசி), வெற்றிவேல் (யு கேடி), ஏ.எல்.மனோகரன், ஜெ.முகமது அனிபா, உமாபதி, வி. ஜெயகோபால் (சிஐடியு) உள்ளிட்ட சகோதர சங்கத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.