காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வம், மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், நகர மன்ற தலைவர் சண்முகம், நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் காட்டாங்குளத்தூர் பகுதி செயலாளர் சேஷாத்திரி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.