ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எம். எஸ். தரணி வேந்தனை ஆதரித்து திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில், இந்தியா கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தலைமை தாங்கினார், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எ.வ. வேலு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.