நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட குழு அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மூத்தத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி செங்கொடியை ஏற்றி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டக்குழு அலுவலகத்தில் செயலாளர் எம். சிவக்குமார் கொடியேற்றி வைத்தார். அதேபோல் ஓசூர் மாநகரில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.