தியாகதுருகம்,பிப்.4- கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா தியாகதுருகம் பேரூராட்சி அலுவலத்தில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையன்று நிறைவடைந்தது. தியாகதுருகம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா பேரூராட்சி அலுவலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்வராஜ் மற்றும் பிரபு ஆகியோரிடம் வேட்பு மனு பெறும் அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் எத்தனை பேர் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதை ஆய்வு செய்தார்.