புதுமை பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூலை 12- புதுமை பெண் திட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகள் புதுமை பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2024-25ம் கல்வியாண்டு முதல் ‘புதுமை பெண்’ திட்டத்தின் வாயிலாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணவியர் ‘புதுமை பெண்’ திட்டத்தில் பயன்பெற அந்தந்த கல்லூரியின் சிறப்பு அலுவலர் (நோடல் அலுவலர்) வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குடும்ப நல மருத்துவர் ஆலோசனை கிளினிக் திறப்பு
சென்னை, ஜூலை 12 சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை அதன் ஓராண்டு விழாவை கொண்டாடும் வகையில் குடும்பங்களுக்கு குறைந்த கட்டணங்களில் முழுமையான சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் “ஃபேமிலி கிளினிக்கை” தொடங்கியுள்ளது. இந்த புதிய ஃபேமிலி கிளினிக்கில் சிறார்கள் முதல், முதி யவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் முந்தைய காலத்தை போன்று குடும்ப நல மருத்துவரின் விரிவான சேவை கிடைக்கும். உடல்நலப் பரிசோதனைகள், தடுப்பூசி மருந்துகள் மற்றும் நோயறிதலுக்கான பரிசோதனைகள் போன்ற முன்தடுப்பு சுகாதார சேவைகள், நோய்கள் வராமல் தடுப்பதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று மருத்து வமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்த் செல்வராஜ்
நங்கநல்லூரில் சிஐடியு பிரச்சாரம்
சென்னை, ஜூலை 12 - முறைசாரா தொழிலாளர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி ஜூலை 16 அன்று தேனாம் பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர்அலுவலகம் முன்பு சிஐடியு பெரும் போராட்டத்தை நடத்த உள்ளது. இதனை விளக்கி வியாழனன்று நங்கநல்லூரில் பிரச்சாரம் நடை பெற்றது. மோகன் ஜி தலைமையில் நடை பெற்ற இந்த பிரச்சாரத்தில் சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், வீட்டு வேலை சங்க மாவட்டத் தலைவர் விஜயா, தையல் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயராமன், சிபிஎம் பகுதிச் செயலாளர் நா.வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர்.
அதிமுக முன்னாள் பெண் எம்எல்ஏ லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜர்
கடலூர், ஜூலை 12- கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியின் சட்ட மன்ற அதிமுக முன்னாள் உறுப்பினர் சத்யா. இவரது கணவர் பன்னீர் செல்வம் 2011-16 ஆம் ஆண்டில் நகர்மன்ற தலைவராக இருந்தார். அப்போது ‘சைக்கிள் ஸ்டாண்ட்’ ஏலம் விடுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த பிப்ரவரி மாதம் சத்யா-பன்னீர் செல்வத்தின் வீடு உள்ளிட்ட ஐந்து இடங்க ளில் சோதனை மேற் கொண்டனர். அப்போது, வருமானத்திற்கு அதிக மாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியி ருந்தனர். இதைத் தொட ர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறை யில் ஆஜராகினர். இருவரிட மும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட னர்.
100 நாள் வேலை திட்ட பயனாளிகள் மறியல்
ஆரணி, ஜூலை 12- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கல்லேரி பட்டு ஊராட்சியில் 1500 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் பணியில் வேலை செய்து வருகின்றனர். தற்போது வேலைக் கேற்ற ஊதியம் என்ற பெயரில் 40 முதல் 50 ரூபாய் வரை தினக்கூலியாக வழங்குவதை கண்டித்து குறைக்கப்பட்ட கூலியை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜூலை 18 விழுப்புரத்தில் திருநங்கைகள் குறைதீர் முகாம்
விழுப்புரம், ஜூலை 12- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 18ஆம் தேதி அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு, திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பழைய திருநங்கை நலவாரிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் இணையதள அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விவரத்தை https:// tg.tnsw.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த தகவலை மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள் தெரிவித்துள்ளார்.
ஆதி திராவிட நலத்துறை விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை, ஜுலை12- திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஆதி திரா விட நலத்துறை விடுதியில் மாவட்ட ஆட்சியர் புதனன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்தும், அவை சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். மாணவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளான மருத்துவ முதலுதவி மருத்துவ பெட்டகத்தை பார்வையிட்டு காலாவதி ஆகாத மருந்துகள் இருப்பு இருக்கிறதா என்பதை பார்வையிட்டார். மாணவர்களுக்காக வைக்கப் பட்ட புகார் பெட்டி சரி வர பராமரிக்கப்படாமல் இருப்பது குறித்து விடுதி காப்பாளருக்கு எச்சரிக்கை செய்தார். மேலும் விடுதி காப்பாளர்களை கண்காணித்து அவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் வகுப்புகள் நடத்தவும் அறிவுறுத்தினார்.