விழுப்புரம்,ஏப்.8- விழுப்புரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலக பெருந்திட்ட வளா கத்திலுள்ள மாவட்ட மைய நூலகத்தை மாவட்ட ஆட்சியர் த.மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு போட்டித் தேர்வுகளுக்கான அனைத்து புத்தகங்களும் இடம்பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போட்டித் தேர்வாளர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். விடுமுறை நாளான வெள்ளிக் கிழமையும் நூலகம் திறந்திருக்கும் என்றும் இந்த நூலகத்தை பயன்படுத்தி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக்கொள்ளலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது முதல் நிலை நூலகர் காசிம், இரண்டாம் நிலை நூலகர் ம.இளஞ்செழியன், மூன்றாம் நிலை நூலகர்கள் பி.ஆரோக்கியம், க.வேல்முருகன், ஆ.முருகன், மு.இந்திராகாந்தி ஆகியோர் இருந்தனர்.